கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பந்தாரப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்கள் வாகனத்தணிக்கை அலுவலில் இருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது நான்கு யூனிட் மண் இருந்த வாகனத்தை பறிமுதல் செய்து குருபரப்பள்ளி காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மற்றும் பெரிப்பட்டி கிராமத்தில் ஊருக்கு வெளியே உள்ள அரசு மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில் அரசு அனுமதியின்றி மண் கடத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை செய்ததில் அனுமதியின்றி மண் கடத்த இருந்த நபர்கள் போலீசாரை பார்த்து தப்பி ஓடி விட்டதாகவும் மண் கடத்த பயன்படுத்திய JCB, டிப்பர் வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது .
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்