சென்னை : தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், போதைப்பொருள் விற்பனையை அறவே ஒலிக்கும் நோக்கமாக காவல் ஆணையாளர் தனி படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதை அடுத்து கேளம்பாக்கம் பகுதியில் போதைப்பொருள் பழக்கமுடைய ஒருவரை பிடித்து ஒடிசாவை சேர்ந்த அக்ஷயா பிரிதா, அவரை விசாரித்தனர். அப்போது அவர் படூரில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்து கொண்டு, கட்டிட வேலை செய்வதுபோல் கஞ்சாவை 5 கிராம். 10 கிராம் என சிறு சிறு பொட்டலங்களாக போட்டு கல்லூரி மாணவர்கள் மற்றும் கட்டிட தொழிலாளர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர்க்கு விற்பனை செய்து வந்துள்ளார். மேலும் அக்ஷயா பிரிதாவின் மனைவி ஜமுனா, என்பவர் ஒடிசாவில் இருந்து ரயிலில், கஞ்சாவை கடத்தி வந்து கணவனிடம் கொடுத்துவிட்டு விற்றப்பணத்தை வாங்கி செல்வார். என விசாரணையில் கூறியதாக காவல்துறையினர், தெரிவித்தனர். மேலும் அவர் தங்கியிருந்த அறையை சோதனை செய்ததில், 2 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்ததை காவல்துறையினர்,பறிமுதல் செய்தனர்.