தேனி : தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ஆம் ஆண்டு கணவன் மனைவி பிரச்சனை காரணமாக பன்னீர்செல்வம் என்பவர் தனது பெண் குழந்தையை கொலை செய்ததைத் தொடர்ந்து அவரது மனைவி பன்னீர்செல்வம் (கணவர்) மீது பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை தொடர்ந்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய குற்ற எண் (151/2020) பிரிவு 302 இதச படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டு வழக்கானது விசாரணையில் இருந்து வந்த நிலையில் இவ்வழக்கின் இறுதி அறிக்கை (14.08.2020) அன்று தாக்கல் செய்யப்பட்டு வழக்கின் விசாரணை மகிளா நீதிமன்றம் தேனியில் நடைபெற்று வந்த நிலையில், இவ்வழக்கு (05.05.2023)-ம் தேதியன்று இறுதி விசாரணையின் முடிவில் தேனி மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி திரு.கோபிநாத்,Bsc,BL., அவர்கள் பழனி செட்டிபட்டி காவல் நிலைய காவல்துறையினரால் அளிக்கப்பட்ட தக்க சாட்சியங்களின் அடிப்படையில் பன்னீர்செல்வம் என்பவர் குற்றவாளி என சந்தேகத்திற்கு இடமில்லாமல் உறுதி செய்து குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 5000 அபராதமும் , அபராத தொகையை கட்டத் தவறினால் 6 மாதம் மெய் காவல் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் திறம்பட வாதுரைத்த அரசு தரப்பு வழக்கறிஞர் திரு.குருவராஜ்,BA,BL., அவர்களையும், சிறப்பாக புலன் விசாரணை செய்த முன்னாள் பழனிசெட்டிபட்டி காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.பாலகுரு அவர்களையும், வழக்கின் ஆவணங்கள்,சாட்சிகளை உரிய நேரத்தில் ஆஜர்படுத்திய தற்போதைய பழனிசெட்டிப்பட்டி காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.ராஜேஸ் அவர்களையும், மேலும் இந்த வழக்கில் சாட்சியங்கள் ஆஜர்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட நீதிமன்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.நாச்சிமுத்து அவர்களையும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்கள் தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.