இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் (25/08/2022), நடைபெற்ற குற்ற ஆய்வு கூட்டத்தில் கடந்த ஜூலை மாதத்தில், சிறப்பாக பணியாற்றிய தலைமை காவலர்கள் திரு.உதயசூரியன், (காவேரிப்பாக்கம் காவல் நிலையம்), திரு.சங்கர் (ஆற்காடு நகர காவல் நிலையம்), திருமதி. கெஜலட்சுமி (இராணிப்பேட்டை காவல் நிலையம்), திரு. புருஷோத்தமன் (சோளிங்கர் காவல் நிலையம்), முதல் நிலை காவலர்கள் திரு.கபிலன் (சிப்காட் காவல் நிலையம்), திரு.சம்பாசிவம் (வாலாஜா காவல் நிலையம்), திரு. வெங்கடேசன் கொண்ட (பாளையம் காவல் நிலையம்), திரு.பாலாஜி (இராணிப்பேட்டை காவல் நிலையம்), இரண்டாம் நிலை காவலர்கள் திரு.சதீஷ்குமார் (அரக்கோணம் நகர காவல் நிலையம்), செல்வி. ஜெயபாரதி (காவேரிப்பாக்கம்), காவல் நிலையம் ஆகியோரை பாராட்டி அவர்களை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். திருமதி. தீபா சத்தியன் இ.கா.ப, அவர்கள் பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசினை வழங்கினார்கள். மேலும் இக்குற்ற ஆய்வு கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு. விஸ்வேஸ்வரய்யா (தலைமையிடம்) மற்றும் திரு . முத்து கருப்பன் (இணைய வழி குற்றப்பிரிவு ) ஆகியோருடன் இராணிப்பேட்டை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரபு, அவர்கள் , காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்