தென்காசி : தென்காசி மாவட்டம், சுரண்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்மையாபுரம் பகுதியில் விற்பனைக்காக புகையிலைப் பொருட்களை வைத்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த பட்டமுத்து என்பவரின் மகன் காளைசாமி (58), மற்றும் சேந்தமரம் பகுதியை சேர்ந்த மூக்கையா என்பவற்றின் மகன் மாடசாமி (25), ஆகிய இரண்டு நபர்கள் மீது சார்பு ஆய்வாளர் திரு.சொரிமுத்து, அவர்கள் வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தார். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 3,700 மதிப்புள்ள சுமார் 09 கிலோ புகையிலைப் பொருட்கள் மற்றும் இருசக்கரவாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.