செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட ஆயுதப்படையில், காவலர்களின் நலனுக்காக தமிழ்நாடு காவல் பல் பொருள் அங்காடியை காவல்துறை இயக்குனர் முனைவர் சைலேந்திரபாபு இ.கா.ப., அவர்கள் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சுகுணா சிங் இ.கா.ப அவர்கள், செங்கல்பட்டு உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பரத், தனிபிரிவு ஆய்வாளர் திரு.அலெக்சாண்டர்,செங்கல்பட்டு நகர காவல் ஆய்வாளர், ஆயுதப்படை காவல் ஆய்வாளர்கள்,உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டார்கள்.