திண்டுக்கல் : (19.09.2022), திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரம் பகுதியில் கடந்த (20.08.2022), ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த பூபாலன் (எ) பூபாலகிருஷ்ணன் (34), என்பவர் கணக்கம்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் பழனி அடிவாரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பூபாலன் (எ) பூபாலகிருஷ்ணன் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.
இந்நிலையில் பூபாலன் (எ) பூபாலகிருஷ்ணன் என்பவரின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் பூபாலன் (எ) பூபாலகிருஷ்ணன் என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
உத்தரவை தொடர்ந்து பழனி அடிவாரம் காவல் நிலைய போலீசார் பூபாலன் (எ) பூபாலகிருஷ்ணன் என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா