கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள ராவுத்தநல்லூர் கிராமத்தில் மாரியம்மன் கோவிலுக்கு கூழ் ஊத்தும் திருவிழாவில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கதிரவனுக்கும், அதே கிராமத்தை சேர்ந்த மாயவன் என்பவருக்கும் ஏற்பட்ட தகராறில் கதிரவன் தரப்பினர் தாக்கியதில் மாயவன் பலத்த காயம் அடைந்த நிலையில் அங்கு இரு தரப்பினர் கிடையே பெரும் மோதல் ஏற்படும் சூழல் நிலவியது பாதுகாப்பு பணியில் இருந்த வட பொன்பரப்பி காவல் நிலைய தலைமை காவலர்-258 திரு.பழனிமுத்து நிலவரத்தை செல்போனில் வீடியோ எடுத்தபடி இரு தரப்பினரையும் சமாளித்து, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருத்த கும்பலை அடக்கி தாக்குதல் எற்படாமல் தனி ஒருவராக நின்று மோதலை தடுத்து நிறுத்தினார்.
சம்பவம் தொடர்பாக வட பொன்பரப்பி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து மாயவனை தாக்கிய கதிரவன்(50) த/பெ ஜெயராஜ், M G (45) த/பெ ஜெயராஜ், சதிஷ்(26) த/பெ பாவாடை, சக்திவேல்(35) த/பெ பாளையம் மற்றும் தனுசு(25) த/பெ பாவாடை ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்டனர். இந்நிலையில் கோவில் திருவிழாவில் இருதரப்பினர்கிடையிலான மோதலை தனி ஒருவராக தடுத்த தலைமை காவலரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.மோகன்ராஜ் அவர்கள் நேரில் அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.