கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு N.மோகன்ராஜ்., அவர்களுக்கு, திருக்கோவிலூர் மற்றும் உளுந்தூர்பேட்டை பகுதிகளில் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி மறைத்து வைத்திருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி திருக்கோவிலூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.பாபு மற்றும் உளுந்தூர்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.அலெக்ஸ் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணைசெய்து வந்தனர்.இந்நிலையில் 13.01.2023-ந் தேதி திருக்கோவிலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேமாலூர் கிராமத்தை சேர்ந்த ஜான்பிரிட்டோ 31 என்பவர் வீட்டின் பின்புறம் மற்றும் உளுந்தூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட யாமம் கிராமத்தில் பயிர் செய்துவந்த கணேசன் 31. சிறுபாக்கம் கிராமம் மற்றும் இவரது நண்பன் கிளியூர் கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் 23. ஆகிய மூவரும் அனுமதியின்றி உரிமம் இல்லாமல் கள்ளத்துப்பாக்கி வைத்து வனவிலங்குகளை வேட்டையாட பதுக்கி வைத்திருந்த போது தனிப்படை காவலர்களால் கைது செய்யப்படனர். இவர்களிடமிருந்து இரண்டு நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை முடித்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் யாரேனும் அனுமதியின்றி உரிமம் இல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தால் தாமாகவே முன்வந்து காவலர்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும் மீறி சட்டத்திற்கு புறம்பாக வைத்திருப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.