சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நாட்டார்மங்கலத்தைச் சேர்ந்த பாண்டி என்பவர் தன் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 09.02.2021 அன்று வீட்டிற்குள் புகுந்த அடையாளம் தெரியாத 05 நபர்கள் பாண்டியின் மனைவி செங்காயின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறித்து சென்றனர். இதுகுறித்து செங்காயி அளித்த புகாரின் பேரில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் திருப்பத்தூர் துணை கண்காணிப்பாளர் திரு. பொன் ரகு அவர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் 12.02.2021 அன்று நாட்டார்மங்கலத்தைச் சேர்ந்த குணசேகரன், மதுரை மல்லிகை நகரைச் சேர்ந்த பூபதி, திருமங்கலம் பெரியவடகரையை சேர்ந்த முத்துக்குமார் என்ற கருப்பு, வண்டியூரை சேர்ந்த மணிகண்டன், மதுரை சிக்கந்தர்புரத்தை சேர்ந்த ஆனந்த் ஆகியோர் இந்த குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவரவே அவர்கள் மீது u/s. 397 IPC – ன் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து 10 பவுன் தங்க செயினை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி