சென்னை : சென்னை பழையவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சேஷாத்திரி, வ/16, என்பவர் 07.02.2021 அன்று கொருக்குப்பேட்டை, இராமனுஜர் கூடத்தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, 4 நபர்கள் சேஷாத்திரியை மிரட்டி அவரிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் சென்ற சம்பவம் குறித்து சேஷாத்திரி, H-4 கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து, H-4 கொருக்குப்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து, செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 1.யோகசக்திவேல், வ/21, பாவாபேட்டை 2.சியான் (எ) சியா முருகன், வ/21, கொருக்குப்பேட்டை 3.ஜோசப், வ/20, கொருக்குப்பேட்டை 4.ஏழுமலை, வ/19, தண்டையார்பேட்டை ஆகிய 4 நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து 1 செல்போன் கைப்பற்றப்பட்டது.அவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டது.
