நாகப்பட்டினம் : ஒரு காலத்தில் காவல் நிலையம் செல்வதற்கு பொதுமக்கள் அஞ்சுவர் ஆனால் தற்போது காவல்நிலையம் சென்று அவர்களை வைத்து மீம்ஸ் போன்ற வீடியோக்கள் வெளியிடுவது டிரெண்ட் ஆகியுள்ளது இது ஒரு தவறான முன்னுதாரணமாகும் அதுபோன்று ஒரு சம்பவம் வலிவலம் காவல் நிலையத்தில் அரங்கேறியுள்ளது வலிவலம் பகுதியை சேர்ந்த இளைஞர் கார்த்திக். காவல் நிலையத்தில் இருந்து தனுஷ் திரைப்படத்தின் டயலாக்கை சொல்லியவாறு காவல் நிலையத்தில் இருந்து ரவுடி வெளியே வருவது போன்ற வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட வே அது வைரலானது இதனைக்கண்ட வலிவலம் காவல்துறையினர் இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.



















