மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே வடுகப்பட்டியில் போதை மறுவாழ்வு மையம் எதிரில் திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சம்பவத்தன்று அதிகாலை 5 மணிக்கு அந்த வழியாக சென்ற வாகன மோதி சுமார் (65). வயது மதிக்கத்தக்க முதியவர் கால் மற்றும் தலை பகுதியில் காயம் அடைந்து மயங்கி கிடந்தார். தகவல் அறிந்த வாடிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த முதியவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் 12 .10 மணிக்கு அந்த முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவர் யார் எந்த ஊர் என்ற விவரம் தெரியவில்லை. ரோஸ் கலர் சட்டை மற்றும் ஊதா கலர் வேட்டி அணிந்து இருந்தார். இது குறித்து தனிச்சியம் கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி, சப் இன்ஸ்பெக்டர் துரைமுருகன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி