திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அருகே உள்ள வைராவிகிணறைச் சேர்ந்தவர் சுயம்பு(51). இவர் அங்குள்ள தனியார் பள்ளியின் நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். இப்பள்ளி வைராவிகிணறு பத்திரகாளி அம்மன் அறக்கட்டளைக்குச் சொந்தமானது. இந்நிலையில் பத்திரகாளியம்மன் கோயில் கொடைவிழாவை நடத்துவது தொடர்பாக இரு பிரிவினரிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதில், ஒரு தரப்பைச் சேர்ந்த பள்ளி நிர்வாகி சுயம்பு எதிர்தரப்பைச் சேர்ந்த பெண்களை ஆபாசமாக பேசி, அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அம்பிகா என்பவர் அளித்த புகாரின்பேரில், கூடங்குளம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து, சுயம்புவை கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















