திண்டுக்கல்: திண்டுக்கல், ஸ்கீம்ரோடு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவன் பாலசரவணன், இவரது வீட்டுக்குள் புகுந்து மர்ம நபர் லேப்டாப்-ஐ திருடி சென்றார். இது தொடர்பாக நகர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து நகர் DSP.கார்த்திக் உத்தரவின் பேரில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையில் சார்பு ஆய்வாளர் சரத்குமார், நகர் குற்ற தடுப்பு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் காவலர்கள் ராதா, முகமதுஅலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட
பூச்சிநாயக்கன்பட்டி, குயவர் தெரு பகுதியை சேர்ந்த தனபால் மகன் மனோஜ்குமார்(28). என்பவரை கைது செய்து அவரிடமிருந்து லேப்டாப்பை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா















