திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வடக்கு கும்பிளம்பாடு, நடுத் தெருவை சேர்ந்த இசக்கிமுத்து மகன் தங்கபாண்டி. (35) இவர் சமூக வலைதளமான முகநூல் பக்கத்தில் இரு தரப்பினருக்கு இடையே பிரச்சனையை தூண்டும் வகையில் சர்ச்சைக்குரிய வசனங்கள் பதிவு செய்து பரப்பியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த ராதாபுரம் காவல் உதவி ஆய்வாளர், சகாய ராபின் வழக்கு பதிவு செய்து தங்கபாண்டியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் சமூக வலைதளங்களை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். இது போன்று பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன். இ.கா.ப., எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்