திருநெல்வேலி: தலைநகர் டெல்லியில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில், பாதுகாப்பை பலப்படுத்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப., உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் முக்கிய பஜார்கள், பேருந்து நிலையங்கள், கடைவீதிகள் என அனைத்து இடங்களிலும் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாதவாறு காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி (13.11.2025) அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், முக்கிய வணிக வளாகங்கள், முக்கிய வீதிகள், பள்ளி பகுதிகள், மருத்துவமனை பகுதிகள், வழிபாட்டுத்தலங்கள் உட்பட முக்கியமான இடங்களில் மோப்பநாய் படை மற்றும் வெடிகுண்டு செயலிழக்கும் படை பிரிவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















