திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் துறை ஆணையர், சந்தோஷ் ஹாதி மணி, இ.கா.ப., உத்தரவுப்படி சந்திப்பு பகுதியில் உள்ள கூட்டுறவு பல்பொருள் அங்காடி, ரசாயன விற்பனை கடைகள், பள்ளி கல்லூரி ஆய்வகங்களிலும் ஸ்பிரிட் எனப்படும் எரி
சாராயம் உரிமம் பெற்றபடி முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை மாநகர மதுவிலக்கு காவல் ஆய்வாளர், இந்திரா தலைமையில் (12.06.2025) அன்று திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இச்சோதனையில் உரிமம் சரியாக புதுப்பிக்கப்பட்டுள்ளதா, முறைகேடுகள் எதுவும் நடந்துள்ளதா எனவும் கண்டறியப்பட்டது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்