நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழாவானது எதிர் வரும் (29.08.2025)-ந் தேதி மாலை திரு கொடியேற்றத்துடன் துவங்கி (08.09.2025)-ந் தேதி மாலை திருகொடி இறக்கத்துடன் முடிவடைய உள்ளது. இதனை முன்னிட்டு திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு. க.ஜோஷி நிர்மல் குமார் இ.கா.ப அவர்கள், தஞ்சாவூர் காவல் சரக துணைத்தலைவர் திரு T.ஜியாவுல்ஹக், இ.கா.ப, அவர்கள், நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சு.செல்வக்குமார் இ.கா.ப அவர்கள் மற்றும் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் திரு. கருண் கரட் இ.கா.ப அவர்களும் (21.08.2025) வேளாங்கண்ணி பகுதிக்கு வருகை புரிந்து அனைத்து பகுதிகளுக்கும் நேரடியாக சென்று களஆய்வு செய்து ஆய்வு கூட்டம் நடத்தி, ஆலோசனைகள் வழங்கினார்கள். திருப்பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் எவ்வித குழப்பமும், அசௌகரியமும் இன்றி சிறப்பான விரைவான போக்குவரத்து வழங்கிட ஆலோசனை வழங்கினார்கள்.