திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப., அறிவுறுத்தலின் பேரில் சைபர் குற்றங்களிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொது மக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி சிவந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் மற்றும் ரோஸ்மேரி மகளிர் கல்லூரியிலும் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முருகன், மற்றும் சைபர் கிரைம் காவல் அதிகாரிகள் பெண்கள் சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதால் ஏற்படும் விளைவுகள், வங்கிக் கணக்குகளின் இரகசிய எண்களை பகிர்ந்தால் வரும் பிரச்சினைகள், முகாந்திரம் இல்லாமல் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் குறுஞ்செய்தி மற்றும் வீடியோ அழைப்புகள் ஆன்லைன் மோசடிகள் குறித்தும் தெளிவாக எடுத்துரைத்தனர். இவ்வகை குற்றங்கள் நடைபெற்றால் இலவச உதவி எண் 1930 மற்றும் (http://cybercrime.gov.in) இணையதள முகவரியில் புகார் அளிக்கலாம் என்றும் கேட்டுக் கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















