திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூர் அருகே மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் , முருகராஜ் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தாழையூத்து சாலையில் குளத்துக்கரை அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த கங்கைகொண்டான், கலைஞர் காலனியைச் சேர் ந்த செல்லமுத்து மகன் செல்வநாயகம் (51). என்பவரிடம் விசாரணை மேற்கொண்ட போது சட்ட விரோதமாக சுமார் 29 மது பாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து, செல்வநாயகத்தை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















