திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், புலியூர்குறிச்சி ராமகிருஷ்ணா புரத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார்(58). இவர், அதே பகுதியைச் சேர்ந்த (5). வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாய், நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிந்து செல்வகுமாரை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்றம் செல்வகுமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரணத்தொகையும் வழங்க உத்தரவிடப்பட்டது.
இவ்வழக்கில் சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக்கொடுத்த நாங்குநேரி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர், தர்ஷிகா நடராஜன், வழக்கை புலன் விசாரணை செய்த காவல் ஆய்வாளர், மங்கையர்க்கரசி, காவலர்கள் உள்ளிட்டோரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப., பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















