திருநெல்வேலி: திருநெல்வேலி நகரம் , வயல் தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி என்ற மகேஷ் (25). கட்டடத் தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த (14). வயது சிறுமியிடம் பழகி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 20-ஆம் தேதி சிறுமி வீட்டிற்கு வராததால் அவரது பெற்றோர் தனது மகளைக் காணவில்லை என திருநெல்வேலி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அச்சிறுமியை மகேஷ் ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து சிறுமியை மீட்ட காவல்துறையினர் மகேஷிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்