திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி வாரந்தோறும் நடைபெற்று வரும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் (26.02.2025) அன்று நடைபெற்றது. திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி இ.கா.ப.,விடம் 16 புகார் மனுக்கள் அளிக்கப்பட்டது. இவற்றின் மீது சரியான நடவடிக்கை மேற்கொண்டு உரிய தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படும் என காவல் ஆணையர் கூறினார். இம்முகாமில் காவல் துணை ஆணையர்கள் V.கீதா,(மேற்கு) சந்திப்பு காவல் உதவி ஆணையர், தர்ஷிகா ஆகியோர் கலந்துகொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்