திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை தாலுக்காவில் புதிதாக அமையப்பெற்ற மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாக திறப்பு விழா காணொளி வாயிலாக திண்டுக்கல் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் திண்டுக்கல் முதன்மை மாவட்ட நீதிபதி.முத்துசாரதா வரவேற்புரை ஆற்றினார். இதில் குஜிலியம்பாறையில் புதிதாக அமையப் பெற்ற நீதிமன்றத்தை சென்னை உயர் நீதி மன்றத்தின் மாண்புமிகு. தலைமை நீதியரசர்.மணிந்திரமோகன் ஸ்ரீவத்சவா தலைமையேற்று, காணொளி வாயிலாக திறந்து வைத்து, தலைமை உரையாற்றினார்.
இந்நிகழ்வில் சென்னை உயர் நீதி மன்றத்தின் மாண்புமிகு நீதியரசர்கள் வேல்முருகன், ஆனந்த் வெங்கடேஷ், கிருஷ்ணன் ராமசாமி, மஞ்சுளா மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் காணொளி வாயிலாக சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலிருந்து கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினர். இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர்.சரவணன், திண்டுக்கல் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் மரு.பிரதீப், வேடசந்தூர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர்.முருகேசன் மற்றும் செயலாளர். பாலமுருகன், திண்டுக்கல் மாவட்டத்திலூள்ள நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்றப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் தீபா, தலைமைக் குற்றவியல் நீதிமன்ற நடுவர் நன்றியுரை ஆற்றினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















