திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப., அறிவுறுத்தலின் படி, மாவட்ட காவல்துறையினர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பத்தமடை காவல் ஆய்வாளர், ஜோதிலட்சுமி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு, பெண்கள் உதவி இலவச தொலைப்பேசி எண்கள்1098, 181 குழந்தை திருமணம், போக்சோ சட்டம் மற்றும் காவலன் SOS செயலின் பயன்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















