திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப., நேரடி கண்காணிப்பில் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் P.P. முருகன் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர், V.ரமா தலைமையில் திருநெல்வேலி மாவட்டத்தில் கைபேசிகள் தொலைந்து போனதாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், 100 கைப்பேசிகள் மீட்கப்பட்டு (24.10.2025) அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மதிப்பு Rs. 17,82,773/- ஆகும்.
மேலும் சைபர் குற்றங்கள் தொடர்பாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் (அ) https://cybercrime.gov.in/ என்ற இணைய தளத்தில் புகார் அளிக்கலாம். மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினரால் நிகழாண்டில் இதுவரை 404 கைபேசிகள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















