திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஐ.டி ஊழியரான கவின் செல்வகணேஷ் (27). பாளையங்கோட்டை, கே.டி.சி நகரில் கடந்த 27-ஆம் தேதி வெட்டிக் கொல்லப்பட்டார். இதனுடன் தொடர்புப்படுத்தி வன்முறைக் காட்சி அடங்கிய காணொலி ஒன்று சமூகவலைதளங்களில் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது.
அந்த காணொளி சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடைபெற்றதாகும். அதற்கும், கவின் கொலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. எனவே, இது போன்று சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் தவறான தகவல்களை சமூகவலைதளங்களில் பரப்பும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்