திண்டுக்கல்: திண்டுக்கல் இரயில் நிலையத்திற்கு காலை வந்த புருலியாவிலிருந்து திருநெல்வேலி வரை செல்லும் திருநெல்வேலி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் இரயிலில் இரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையில், சிறப்பு சார்பு ஆய்வாளர் மணிகண்டன் காவலர்கள் மணிமாறன், லோகேஷ், கோமதி, சித்ரா ஆகியோர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது முன்பதிவு இல்லா பெட்டியில் இருக்கைக்கு அடியில் கேட்பாரற்று இருந்த பேக்கை சோதனை செய்த போது அதில் அரசால் தடை செய்யப்பட்ட 17 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து இரயில்வே போலீசார் குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















