திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு, விபத்து ஏற்படுத்திய வழக்கில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் கிருஷ்ணா சேத்வால்(54). என்பவர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் வெளிவந்தார். இந்நிலையில் அவர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததால் அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.
இதையடுத்து 1 ஆண்டு 3 மாதம் தலைமறைவாக இருந்த சஞ்சய் கிருஷ்ணா சேத்வாலை மகாராஷ்டிர மாநிலத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரை மானூர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்