திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த கொலை முயற்சி வழக்கில் திண்டுக்கல், பாறைப்பட்டியை சேர்ந்த செட்டியப்பன் மகன் ராஜீவ்காந்தி என்பவரை நகர் தெற்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனைத்தொடர்ந்து ராஜீவ்காந்தி நீதிமன்ற பிணை பெற்று வெளியே சென்று நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் திண்டுக்கல் நீதிமன்றம் பிடியானை பிறப்பித்தது.
இது தொடர்பாக நகர் DSP.கார்த்திக் மேற்பார்வையில் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில் சார்பு ஆய்வாளர் பிரபாகரன் காவலர்கள் ஜெயந்திலால், பாண்டித்துரை ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு ராஜீவ்காந்தியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி நீதிமன்ற நீதிமன்ற பிடியானையை நிறைவேற்றினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா