சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் இந்த வீடியோவில் காணப்படும் சிறுவன் (14). வயதுடையவர் ஆவார். அவர் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய நிலையில், வீட்டு வேலைகளில் உதவி செய்து வந்துள்ளார். அவரது சொந்த மாமா சேவுகன் (வயது 45). உள்ளூர் மதுபான கடையில் இருந்து மதுபானம் வாங்கி, அந்த சிறுவனுக்கு வழங்கியுள்ளார். இது குறித்து நடவடிக்கை எடுத்த சிங்கம்புணரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அவர்கள், சேவுகனை கைது செய்து, சிங்கம்புணரி காவல் நிலைய வழக்கு எண் 41/26, சிறுவர் நீதி (JJ Act) சட்டம் பிரிவு 77-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து சிங்கம்புணரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிபதி அவர்களால் (25.02.2026) வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதன் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி
















