திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள வைராவிகுளத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் (55). ஆட்டோ ஓட்டுநர். இவருடைய ஆட்டோவில் பள்ளி சென்று வரும் 6 ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாயார் அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் முருகானந்தம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்