திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., அறிவுறுத்தலின் படி மாநகர காவல் அதிகாரிகள் மூலம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக சர்வதேச போதை தடுப்பு தினமான (26.06.2025) அன்று மாநகர மதுவிலக்கு காவல் ஆய்வாளர், இந்திரா தலைமையில் மாணவ, மாணவியர், மற்றும் பொது மக்களுக்கும் போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சி நடத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்