திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை பகுதியில் (17.05.2025) அன்று மதுவிலக்கு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், முருகராஜ் தலைமையில் மதுவிலக்கு காவல்துறையினர் ரோந்து சென்றபோது முருகன்குறிச்சி வாய்க்கால் பாலம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யனார் (42). என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்