திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு சொத்து பிரச்சனை காரணமாக மாசாணம்(50). என்பவரை கொலை செய்த வழக்கில் பழனி அழகாபுரியை சேர்ந்த கருப்பசாமி மகன் பழனிச்சாமி(35). என்பவரை பழனி தாலுகா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட S.P.பிரதீப் அறிவுறுத்தலின் பேரில் போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோரின் சீரிய முயற்சியால் இன்று கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா