திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதியில் கொலை முயற்சி, மிரட்டல் தொடர்பான வழக்குகளில் சீவலப்பேரியை சேர்ந்த மகாராஜன் மகன் சண்முகதுரை (25). என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவர் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், அவரை குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையிலடைக்க கங்கைகொண்டான் காவல் ஆய்வாளர், வேல்கனி கோரிக்கை படி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப., மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைந்தார். அதன் பேரில் ஆட்சியர் இரா.சுகுமார் பிறப்பித்த உத்தரவுப்படி, சண்முகத்துரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்