இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் காவல் நிலைய பகுதியில் கார்த்திகேயன் என்பவரை கொலை செய்த வினோத்குமார் என்ற நபர் மீது பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். மேலும் இந்நபர் தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் பொருட்டு இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன்.IAS., அவர்கள் வினோத்குமாரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அடைக்க உத்தரவிட்டார்கள்.
















