திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம், ராமையன்பட்டியைச் சேர்ந்த ராஜ் மகன் சுரேஷ்(24). யோசுவா மகன் நந்தகுமார்(21).முத்துராஜ் மகன் கதிரவன்(23). லெட்சுமணன் மகன் சுடலைமணி(23). ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த இவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்க மானூர் காவல் ஆய்வாளர், சந்திரசேகரன் விடுத்த வேண்டுகோள் படி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப., மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் உத்தரவுப்படி சுரேஷ், நந்தகுமார், கதிரவன், சுடலைமணி ஆகிய நால்வரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் (08.11.2025) அன்று அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















