திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் குற்ற செயல்களில் ஈடுபட்டதாக ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த தளவாய் மகன் பெருமாள்(25). கணேசன் மகன் அஜித்குமார்(30). பெருமாள் மகன் கிருஷ்ண பெருமாள் (19). ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இவர்கள் தொடர்ந்து கொலை மிரட்டல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால் மூவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் உத்தரவுப்படி பெருமாள், அஜித்குமார், கிருஷ்ண பெருமாள் ஆகிய மூவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் (15.11.2025) அன்று அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















