திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மானூர் எட்டாங்குளத்தை சேர்ந்த காளிதாஸ் மகன் கார்த்தி (23). என்பவர் கொலை மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மானூர் வட்ட காவல் ஆய்வாளர், சந்திரசேகரன் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு விடுத்த வேண்டுகோள் படி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன். இ.கா.ப, பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், கார்த்திக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் (23.09.2025) அன்று அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்