திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூர் பகுதியில் கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வந்த தச்சநல்லூர், சங்கரன்கோவில் ரோடு பகுதியை சேர்ந்த கருப்பசாமி மகன் சங்கர்(38). என்பவரை திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர், மரு.V.பிரசண்ணகுமார் இ.கா.ப., (மேற்கு). காவல் உதவி ஆணையர் A.சரவணன், (சந்திப்பு சரகம்). காவல் ஆய்வாளர் க.தில்லை நாகராஜன் (தச்சநல்லூர் சட்டம் ஒழுங்கு) ஆகியோரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப. ஆணைப்படி (17.12.2025) அன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















