திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரப் பகுதியில் பணப்பிரச்சனை காரணமாக பொதுமக்களை அச்சுறுத்தி கடத்திச் சென்ற வழக்கில் சம்பந்தப்பட்டு, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த திருநெல்வேலி மாநகரம், பேட்டை, கோடீஸ்வரன் நகரை சேர்ந்த பெருமாள் பாண்டியன் மகன் வானமாமலை(43). என்பவர் திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் மரு.V.பிரசண்ணகுமார்,இ.கா.ப.,(மேற்கு), காவல் உதவி ஆணையர் திரு.மு.அஜுக்குமார் (டவுண் சரகம்), காவல் ஆய்வாளர் (பேட்டை) திரு.இரா.விமலன். ஆகியோரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் திரு.சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., அவர்களின் ஆணைப்படி (29.10.2025)-ம் தேதி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.















