திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியில் கொலை,கொலை முயற்சி மற்றும் மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட மகாராஜன் (23). என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் குற்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால் கூடங்குளம் காவல் ஆய்வாளர், ரெகு ராஜன் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு விடுத்த வேண்டுகோள் படி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப. பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவுப்படி, மகாராஜனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் (13.09.2025) அன்று அடைத்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்