திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டை ராஜேந்திர நகரைச் சேர்ந்த ஜெயராஜ் மகன் பார்த்திபன் (20). தூத்துக்குடி மாவட்டம், வசவப்புரத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் ஹரிசுப்பிரமணியன் (20). இவா்கள் இருவரும் பாளையங்கோட்டையில் கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்துதல் வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள். மேலும், பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வந்ததால் அவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர், வினோத் சாந்தாராம், (கிழக்கு) காவல் உதவி ஆணையர், நிக்சன், (பாளையங்கோட்டை சரகம்) பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர், காசிப்பாண்டியன் ஆகியோர் பரிந்துரை செய்தனர். அதன் பேரில், அவர்கள் இருவரையும் திருநெல்வேலி சரக காவல் துறை துணைத்தலைவர் அபிநவ்குமார், இ.கா.ப., (பொறுப்பு) குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்