திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட நாங்குநேரி, வன்னியன் குடியிருப்பு, மேல தெருவை சேர்ந்த அண்ணபாண்டி என்பவரின் மகன் தமிழரசன் (25). கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்த இவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஏர்வாடி காவல் ஆய்வாளர், செல்வி விடுத்த வேண்டுகோள்படி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப, பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவுப்படி தமிழரசன் பாளை மத்திய சிறையில் (30.12.2025) அன்று அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















