திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைகுறிச்சி பகுதியில் கொலை முயற்சி, அடிதடி மற்றும் வழிப்பறி வழக்கில் ஈடுபட்ட அம்பாசமுத்திரம், முடபாலத்தை சேர்ந்த இசக்கிமுத்து என்ற முகேஷ் (20). சுனில்ராஜ் (19). முத்து (21). கணேச மூர்த்தி (22). ஆகிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் குற்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால் அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளர், சண்முகவேல் (பொறுப்பு) குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு விடுத்த வேண்டுகோள் படி, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N. சிலம்பரசன், இ.கா.ப. பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், நால்வரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் (02.08.2025) அன்று அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்