திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சீதபற்பநல்லூர் பகுதியில் கொலை முயற்சி,கொலை மிரட்டல், வழக்கில் ஈடுபட்ட சிறுக்கன்குறிச்சி மேட்டு தெருவை சேர்ந்த சங்கரலிங்கம் மகன் பேச்சி முத்து(35). கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சீதபற்பநல்லூர் காவல் ஆய்வாளர், சுப்புலெட்சுமி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்ததின் பேரில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப, பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் (27.09.2025) அன்று அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்