திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இடைகால் வடக்குத் தெருவைச் சேர்ந்த பெத்துராஜ் மகன் மகாராஜன் (30). கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட மகாராஜனை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. N. சிலம்பரசன், இ.கா.ப., பரிந்துரையின்பேரில், மகாராஜனை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டார். இதையடுத்து, மகாராஜனை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் காவல் ஆய்வாளர், சண்முகவேல் கைது செய்து சிறையில் அடைத்தார்.