திருநெல்வேலி : திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பணம் பறிப்பு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மேல பூவந்தியை சேர்ந்த பாரதி என்ற சூர்யாவை (25). குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர், வி.பிரசன்னகுமார், (மேற்கு) சந்திப்பு சரக காவல் உதவி ஆணையர், என்.தர்ஷிகா நடராஜன் ஆகியோரின் பரிந்துரைப்படி திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., உத்தரவுப்படி, பாரதி என்ற சூர்யா பாளையங்கோட்டை மத்திய சிறையில் (12.07.2025) அன்று அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்